bsnleu

bsnleu

welcome

welcome

Tuesday 25 April 2017

அரசு ஊழியர் காலவரையற்ற வேலைநிறுத்தம் அரசின் மெத்தனத்தால் நிர்வாகம் முடங்குகிறது...

தமிழகம் முழுவதும் 4.5லட்சம் அரசு ஊழியர்கள் 25-04-17 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 64 அரசு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அன்பரசு தெரிவித்துள்ளார்.
வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக மார்ச் 31-ம் தேதி அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இன்றைய தினம் விவசாயிகளை ஆதரித்து அனைத்து கட்சிகளும், நமது தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும்  மாநிலம் தழுவிய கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்ட போராட்டத்திற்கு எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், புதிய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களும் போராட்டத்தில் இறங்கி  உள்ளனர். அரசு ஊழியர்களின் போராட்டம் வெல்ல வேண்டுமென நமது BSNLEU சங்கம் போராட்ட வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றது. 

No comments:

Post a Comment