அருமைத் தோழர்களே ! நமது BSNLEU மத்திய சங்க செய்திகளை தொகுத்து நமது தமிழ் மாநில சங்கம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையை காண இங்கே கிளிக் செய்யவும். . . .
bsnleu

welcome

Friday, 31 March 2017
Thursday, 30 March 2017
கவன ஈர்ப்பு தினம்- 05.04.2017
15.03.2017 அன்று புதுடெல்லியில் கூடிய அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டத்தில் 05.04.2017 அன்று ஊதிய மாற்றம் தொடர்பான முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி அட்டை அணிந்து வாயிற் கூட்டங்கள் நடத்தி கவன ஈர்ப்பு தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான தயாரிப்பு பணிகளை செய்து வருகின்றோம் . அன்றைய தினம் அணிய இருக்கும் அட்டையில் இடம்பெற வேண்டிய வாசகங்களின் தமிழாக்கம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒன்று பட்டு போராடுவோம். வெற்றி பெறுவோம்.!! 05-04-17 கவன ஈர்ப்பு நாள் அணிய வேண்டிய அட்டையின் வாசகங்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
30-03-17 பணி நிறைவு பாராட்டு விழா . . .
அருமைத் தோழர்களே ! 30-03-17 அன்று காலை 10 மணிக்கு மேல் பணி நிறைவு பாராட்டு விழா நமது பொது மேலாளர் அலுவலகத்தில் உள்ள மனமகிழ் மன்றத்தில் நடைபெற உள்ளது. கீழ்கண்ட தோழர்கள் இம்மாதம் பணி நிறைவு செய்கின்றார்கள். அனைத்து தோழர்களின் பனி நிறைவு காலம் சிறக்க நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் உளப்பூர்வமான வாழத்துக் களை தெரிவித்துக்கொள்கிறது...
- S.அங்கயற்கண்ணி, OS - NJR
- M.ஆதிமூலம், JTO - KDL
- G.தனலட்சுமி , TT - GM(O)
- V.ஜெயபாலன், TT - PKM
- J.கல்யாணி , OS - DDG
- V.கார்மேகம், ATT - UTM
- P.கருப்பசாமி , OS - PLN
- N.நெவிலி , TT - MEL
- K.பழனிச்சாமி, AOS -TEI
- M.பழனிச்சாமி , TT - DDG
- F.பிலிப், TT - TKM
- S.ராஜேந்திரன், TT - ELLIS
- M.சரோஜா , TT - TKM
- A.சுல்த்தான் அலாவுதீன், TT - GM(O)
- S.தண்டபாணி, TT - DDG
- S.வீரகாமு , SOA - BOK
- S.ஜெயலட்சுமி , JTO - EMM (VRS)
- S.மீனாட்சி சுந்தரம், TT - GM(O).


Wednesday, 29 March 2017
23 வது மாநில கவுன்சில் நிகழ்ச்சி நிரல் . . .
அருமைத் தோழர்களே ! நமது தமிழ் மாநில23 வது கவுன்சிலுக்கான ஆய்படு பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை காண இங்கே கிளிக் செய்யவும்.
5.4.17 கவன ஈர்ப்பு நாள்
Matter for the badge, to be worn on the Call Attention Day to be held on 05.04.2017.
The meeting of the unions and associations held at New Delhi on 15.03.2017, has called on the employees to wear Demands Badges on 05.04.2017 and also to conduct gate meetings. The matter to be printed on the badges is given below. Circle and district secretaries are requested to print badges, carrying this matter, to be worn on the Call Attention Day, to be held on 05.04.2017.
Call Attention Day
05.04.2017
DEMANDS
(1) Settle Wage Revision of BSNL Employees w.e.f. 01.01.2017.
(2) Settle revision of pension from 01.01.2017.
(3) Implement 30% Superannuation benefits to DR employees.
(4) Calculate pension contribution on actual basic pay.
– Unions and Associations in BSNL
|
SBI யில்ஆட்குறைப்பு / புதியநியமனத்திற்குதடை . . .
மோடி&அருண்ஜேட்லிகூட்டணியின் - ஊழியர்விரோத/ இளைஞர்விரோதநடவடிக்கை

எஸ்பிஐ வங்கியுடன் ஐந்து துணை வங்கிகள் இணைப்பு நடை பெற்றதையடுத்து இந்த நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படு கின்றன. அடுத்த இரண்டு ஆண்டு களில் கணிசமாக வேலையிழப்பு இருக்கும் என்றும், புதிய பணி யாளர்களை எடுப்பதும் குறைக்கப் படுவதுடன், மின்னணு முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் எஸ்பிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் ரஜ்னிஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,குறிப்பிட்ட கால இடை வெளிக்குள் பணியாளர்கள் குறைக் கப்படுவார்கள், வாய்ப்பு அமைந்தால் இரண்டு ஆண்டுகளுக்குள் 10 சதவீதம்பேர் குறைக்கப் படுவார்கள். தற்போது எஸ்பிஐ வங்கியில் 2,07,000 ஊழியர்கள்
உள்ளனர். இதனோடு எஸ்பிபிஜே, எஸ்பிஎம், எஸ்பிடி, எஸ்பிபி, எஸ்பிஹெச் மற்றும் பாரதிய மகிளா வங்கி என 6 வங்கிகளில் உள்ள 70,000 பணியாளர்கள் ஏப்ரல் 1 ம் தேதி முதல் எஸ்பிஐ பணியாளர்களாக இணைகின்றனர். இந்த இணைப்புக்கு பிறகு எஸ்பிஐ வங்கி ஊழியர்களின் எண்ணிக்கை 2,77,000 உயர உள்ளது. இந்த எண்ணிக்கையை 2019ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 2,60,000 ஆக குறைக்கப்படும். அதாவது 10 சதவீதத்துக்கும் குறைவாக பணிநீக்கம் இருக்கும் என்றார். இணைப்புக்கு பிறகு பணிகளை மறுவரையறை செய்த பிறகுதான் பணிநீக்க நடவடிக்கை இருக்கும் என்று குறிப்பிட்டதுடன், இது கட்டாய பணி நீக்கமாக இருக்காது, இதற்காக விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்படும், மேலும் பணிநிறைவு அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் வெளியேறுபவர்களுக்கு மாற்றாக உடனடியாக பணியாளர்கள் தேர்வு இருக்காது.டிஜிட்டல் முயற்சிகளால் மனித உழைப்பு குறையும் என்றதுடன், இது ஒன்றோடு ஒன்று இணைந்த நிகழ்வுகள் என்றும் கூறினார். … நன்றிதிதமிழ்இந்து 28 03 2017
Tuesday, 28 March 2017
தில்லியில் போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்து யெச்சூரி ஆதரவு. . .

தமிழக மக்கள் போராட்டத்தை மதிக்காமல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒப்பந்தம் போட்டது மத்திய அரசு!

Monday, 27 March 2017
வெற்றி ... வெற்றி ... TNTCWU மாபெரும் வெற்றி
வெற்றி ... வெற்றி ... மாபெரும் வெற்றி
அருமைத் தோழர்களே ! மிக நெடுங் காலமாக பணியாற்றிய
ஒப்பந்ததொழிலாளர்களை நிரந்தரப்படுத்தவேண்டும்
என்று ஓப்பந்ததொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக(TNCTWU)
நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
12 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராடியதன்
விளைவாக கடந்த 23/3/17 அன்று தீர்ப்புவந்துள்ளது.
தமிழ்நாட்டில் 37 பேர்களை நிரந்தரப்படுத்தவேண்டும்.
இதற்காக பணியாற்றிய TNTCWU மற்றும் BSNLEU
சங்க தலைவர்களை மனதார பாராட்டுகிறோம்
நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..
பாரத ஸ்டேட் வங்கி தலைவருக்கு ஒரு திறந்த மடல். . .

Sunday, 26 March 2017
வங்கிக் கடன்.... யுனியன் பேங்க்-நீட்டிப்பு . . .
அருமைத்வ தோழர்களே ! நமது ஊழியர்களுக்கு வங்கிக் கடன்.... யுனியன் பேங்க்-நீட்டிப்பு செய்துள்ளது.
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் MOU 01.01.2017 TO 31.12.2017 வரை புதுப்பிக்கப்பட்டு உத்தரவு ....

எம்.பி.க்களில் 443 கோடீஸ்வரர்கள் . . .

அதிகபட்சமாக பாஜகவில் 237 பேரும், காங்கிரசில் 35 பேரும் கோடீஸ்வரர்கள். அதிமுகவில் 29 பேர் கோடீஸ்வரர்கள்.தீக்கதிர்.
செய்தி . . .துளி . .
- எம்.டி.என்.எல் மும்பை மற்றும் தில்லியில் செயல்படும் தொலைதொடர்பு நிறுவனம். பி.எஸ்.என்.எல் மும்பை மற்றும் தில்லியை தவிர இந்தியாவின் அணைத்து நகரத்தில் செயல்படும் தொலை தொடர்பு நிறுவனம். மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் இவ்விரண்டு நிறுவனங்களும் வரும் ஜூன் மாதம் முதல் ஒன்றிணைந்து செயல்பட போவதாக பி.எஸ்.என்.எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான அனுபம் ஸ்ரீவட்சா தெரிவித்துள்ளார்.வரும் ஜூன் மாதம் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஒன்றாக இணையப்போவதாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டிருந்தது.மேலும் கடந்த மாதம் நடந்த தொலைதொடர்ப்பு துறையின் உயர்மட்ட குழு கூட்டத்தில் , தொலைதொடர்பு துறையில் தற்போது அதிகரித்துள்ள போட்டியின் காரணமாக நிதி பற்றாக்குறையால் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள இந்த இரு நிறுவனங்களும் இணைவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.இந்நிலையில் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகிய இரு தொலை தொடர்பு நிறுவனங்களும் ஒன்றிணைய போவதாக பி.எஸ்.என்.எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான அனுபம் ஸ்ரீவட்சா தெரிவித்துள்ளார். மேலும் அவர், இவ்வாறு ஒன்றிணைவது இந்த இரண்டு நிறுவனங்களும் லாபம் என்றாலும் , இவ்விரு நிறுவனங்களுக்கான கடன் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளம் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளை முதலில் சரி செய்ய வேண்டும். நிறுவன மற்றும் மொபைல் பிரிவு வணிகத்தில் இவ்விரு நிறுவனங்களுக்கும் தற்போது ஒருமைப்பாட்டுடன் தான் செயல்பட்டு வருகிறது.எம்.டி.என்.எல் நிறுவனத்திற்கு அதிகப்படியான கடன் உள்ளது. ஒன்றிணைந்த பின்பும் கடன் தொடராது இருக்க நாங்கள் மிக விழிப்புடன் இருக்க வேண்டும் . இல்லையேல் , இது மிக பெரிய பாரமாகிவிடும் . ஒரு வர்த்தக நிறுவனத்திற்கு கூட பேன் – இந்தியா (இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் செயல்படுவது) வழிப்பாதை மிக முக்கியம். மிக பெரிய வர்த்தக நிறுவனங்களின் தலைமை அலுவலகம் மும்பை மற்றும் தில்லி தான் உள்ளது. அதனால் நாங்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட எம்.டி.என்.எல் உடன் இணைவதன் முக்கியமே.இவ்வாறு ஒன்றிணைவதனால் , இரு நிறுவனங்களும் பேன் – இந்தியா மொபைல் சேவையை மூலமாக மும்பை மற்றும் தில்லி சந்தைகளில் செயல்பட முடியும் . மேலும் இது புதிய மூலதனத்திற்கு உதவி செய்யும்.பி.எஸ்.என்.எல் வர்த்தக வளர்ச்சி தற்போது 35%-மாக உள்ளது. பேன் – இந்தியா திட்டம் மற்றும் எம்.டி.என்.எல் உடன் ஒன்றிணைவதால் இதன் வளர்ச்சி 45%மாக உயரும் என கூறினார்..
Saturday, 25 March 2017
கார்ட்டூன் . . . கார்னர்

விமான பயணத்தில் முதல் வகுப்பு வழங்காததால் ஆத்திரம்: விமான நிறுவன மேலாளரை செருப்பால் 25 முறை தாக்கினார் சிவசேனா எம்.பி. ரவீந்திர கெயிக்வாட்! - செய்தி
உ.பி. நிலவரத்த வச்சுப் பாத்தா கெயிக்வாட்டுக்கும் முதலமைச்சர் பதவி கிடைச்சாலும் ஆச்சர்யப் படுறதுக்கில்ல!
Sunday, 19 March 2017
Subscribe to:
Posts (Atom)