bsnleu

bsnleu

welcome

welcome

Wednesday 2 August 2017

ரயில்வே துறை தனியாருக்குத் தாரை வார்ப்பு -தபன்சென் கண்டனம்.

புதுதில்லி, ஆக.1-
ரயில்வேதுறையை மத்திய அரசாங்கம் படிப்படியாகத் தனியாருக்குத் தாரை வார்த்திட நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இதனைக் கண்டிக்கின்றோம். இவ்வாறு தனியாருக்குத் தாரை வார்க்கும் செயல்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், சிஐடியு அகில இந்திய பொதுச்செயலாளருமான தபன் சென் கூறினார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. திங்கள் அன்று அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் தபன் சென் பேசியதாவது:
Image resultஇந்தியாவின் பிரதானப் போக்குவரத்து அமைப்பாகச் செயல்படும் ரயில்வே துறையை கொஞ்சம் கொஞ்சமாக முழுமையாகத் தனியாரிடம் தாரை வார்த்திட அரசாங்கம் எடுத்துவரும் நாசகரக் கொள்கைகளுக்கு எதிராக என்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்திடவும், இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டுவரவும் விரும்புகிறேன். ரயில்வேயில் ஏற்கனவே பல பணிகள்அதாவது துப்புரவுப் பணிகள், உணவு வழங்கும் பணிகள், நிர்வாகப் பணிகள் முதலானவைஅவுட்சோர்சிங் மூலமாகத் தனியாரிடம் தரப்பட்டு விட்டனஒவ்வோராண்டும் 150 ரயில் என்ஜின்கள் (லோகோமோடிவ்ஸ்) வாங்குவதற்கான உத்தரவாதத்துடன் அமெரிக்க நிறுவனமான ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்துடனும், பிரான்ஸ் நிறுவனமான அல்ஸ்டாம் நிறுவனத்துடனும் ஒப்பந்தத்தினை மத்திய அரசு செய்திருப்பதன்மூலம், இந்தியாவில் சித்தரஞ்சனிலும், வாரணாசியிலும் செயல்பட்டு வரும் ரயில் எஞ்சின் உற்பத்திப்  பிரிவுகளையும், மற்றும்பெல்நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள கொள்திறனையும் மூடுவதற்கு வழிசெய்து தந்திருக்கிறதுரயில் பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கும் ஆர்டர்களை அளித்திருக்கிறது. அதன்மூலம் நம் நாட்டிலுள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலைகளுக்கும் மூடுவிழா காண நடவடிக்கை எடுத்திருக்கிறது. இவை அனைத்தும் நடந்துகொண்டிருக்கின்றன.
அடுத்ததாக, நாட்டில் உள்ள 407 ரயில் நிலையங்களையும் தனியாரிடம் ஒப்படைத்திட இருக்கின்றனர். பல்வேறு மெட்ரோ நகரங்களில் உள்ள 23 ரயில் நிலையங்கள் ஏற்கனவே இதற்காக இறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. டெண்டர்கள் கேட்கப்பட்டிருக்கின்றன. டெண்டரில் உள்ள நிபந்தனைகளின்படி இவ்வாறு தனியாரிடம் ஒப்படைக்கும் ரயில் நிலையங்களில் பணியில் உள்ள ரயில்வே ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள். இதற்கான நடவடிக்கைகளும் நடந்துகொண்டிருக்கின்றன.
அடுத்ததாக, ரயில்வே வளர்ச்சி அதிகாரக்குழுமம் (ரயில்வே டெவலப்மெண்ட் அத்தாரிட்டி) என்னும் ஓர் அமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் பணி என்ன தெரியுமா? இந்திய ரயில்வேயின் கீழ் உள்ள ரயில்வே பாதைகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்காக நடவடிக்கை எடுப்பதுதான். இது முதலாவதாகும். இரண்டாவதாக, ரயில்வே பயணிகள் கட்டணங்கள் மற்றும் சரக்குக் கட்டணங்கள் உற்பத்திச்செலவினத்தின்  அடிப்படையில் (cost basis) இனி அமைந்திடும். மானியங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும். தற்சமயம் ரயில்வே கட்டணங்களில் 47 சதவீத அளவிற்கு மானியத் தொகை இருக்கிறது. எனவே அரசின் புதிய கட்டணங்கள் செயல்படுத்தப்பட்டால் இப்போதுள்ள கட்டணங்கள் இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும். இவை மக்கள் மீதான சுமைகளாகும். இவர்கள் ஆட்சிக்கு வந்தபின்னர், ‘இந்தியாவின் உற்பத்தி செய்வதற்குப்பதிலாக, இந்தியாவை முற்றிலுமாக அழித்திடும் வேலையில் இறங்கி இருக்கிறார்கள். இது மிகவும் மோசமான தேச விரோத நடவடிக்கையாகும். இவை அனைத்தையும் தவிர்த்திட வேண்டும் என்று இந்த  அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். இல்லையேல், நாட்டு மக்கள் தங்கள் ஒற்றுமை பலத்தின் மூலமாக இந்த நாசகர நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவார்கள்.
அரசின் இந்த ஊழியர்விரோத, தேச விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக,
ஏற்கனவே ரயில்வே ஊழியர்களும், தொழிற்சங்கங்களும் போராட்டப்பாதையில் அணிதிரளத் தொடங்கிவிட்டார்கள்.  ஆயினும் அரசாங்கம் தேசபக்த முழக்கத்தைச் சொல்லிக்கொண்டே இவ்வாறு தேச விரோத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இவை மக்களை மோசடியான முறையில் வஞ்சிக்கும் செயலாகும். அரசின் இந்த நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியவைகளாகும். இவற்றை இந்த அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு தபன்சென் கூறினார். தபன்சென் கோரிக்கையோடு ஜெயா பச்சன், வீரேந்திரகுமார், சி.பி.நாராயணன், து.ராஜா முதலானவர்களும் தங்களை இணைத்துக்கொண்டார்கள்.

No comments:

Post a Comment