bsnleu

bsnleu

welcome

welcome

Sunday 6 August 2017

ஆகஸ்ட்-6,ஹிரோஷிமா, நாகாஷி நினைவு தினம்...


Image result for nagasaki hiroshima bombing
ஜப்பான் நாட்டிலுள்ளஹிரோஷிமாநகரத்தின் மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி அமெரிக்கா அணுகுண்டு போட்டது.
அந்த அணுகுண்டிற்கு அமெரிக்கா விளையாட்டாக வைத்த பெயர்சின்னப் பையன்’ (little boy) என்பதாகும்
மூன்று நாட்கள் கழித்துநாகசாகிநகரத்தின் மீது அணுகுண்டைப் போட்டனர். அதற்குகுண்டு மனிதன்’ (fat man) என்று பெயர் சூட்டினர்.
இந்த அகோரக் குண்டு வீச்சினால் ஏற்பட்ட சாவும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முயன்றும் முடியவில்லை. வரலாறு காணாத சேதாரம் என்று மட்டுமே சொல்ல முடியும்.
சுமாராகக் கணக்கிட்டதில் ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் 1,40,000 பேர் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள் என்றும் 74,000 பேர் நாகசாகியில் மரணமடைந்தனர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
குண்டு விழுந்த பிறகு மாதக் கணக்காக, வருடக்கணக்காக சிலர் குற்றுயிரும் குலையுயிருமாக உயிருடன் இருந்து துன்பப்பட்டு, கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தனர்.
இறந்தவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏதுமறியாத அப்பாவிப் பொதுமக்கள்என்று ஆய்வறிக்கை கூறியது.
அமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது என்று சொன்னது குறிப்பிடத்தக்கது..

No comments:

Post a Comment