bsnleu

bsnleu

welcome

welcome

Saturday, 25 August 2018

BSNLEU conveys it's best wishes on the occasion of "Onam

Due to the devastations caused by the unprecedented floods that hit Kerala recently, “Onam” festival is not being celebrated by Keralities this year. On this occasion, BSNLEU conveys it’s best wishes to the people of Kerala, for an early recovery from the tragedy. Happy Onam to all.

Sunday, 19 August 2018

கன மழையால் பாதிக்கப்பட்ட கேரளத்திற்கு கை கொடுப்போம்

கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர்  உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களுக்கு மதுரை மாவட்ட  BSNL ஊழியர் சங்கம் அஞ்சலி செலுத்துவதுடன் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என மாநில் சங்க வேண்டுகோளை நிறைவேற்ற அனைத்து கிளைகளுக்கும்  அறைகூவல் விடுக்கின்றது. இந்த உதவிகளை உடனடியாக களத்தில் இறங்கி நிதி திரட்டிட வேண்டும் என மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது .
தோழமையுடன் 
c .செல்வின் சத்தியராஜ் 
மாவட்ட செயலர் 

LOCAL COUNCIL MEETING ON 21.8.2018

Image result for meeting
மதுரை லோக்கல் கவுன்சில் கூட்டம் வருகிற 21.8.2018 அன்று நடக்க இருக்கிறது .அதற்கான் PRE COUNCIL MEETING 20.8.2018 அன்று BSNLEU சங்க அலுவலத்தில் காலை 11மணிக்கு தோழர் சிவகுருநாதன் NFTE தலைமையில் நடைபெறும் .


Tuesday, 10 April 2018

AUAB மதுரையில் ஆர்ப்பாட்டம்

Image may contain: 5 people, people standingImage may contain: 3 people, including Barathan Subramaniyan, people standing

Image may contain: 2 people, people standing and outdoor
Image may contain: 4 people, people standing



தமிழ்நாடு AUAB அறைகூவளுக்கிணங்க மதுரையில் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் தோழர் ஜி.ராஜேந்திரன் NFTE தலைமையில் நடைபெற்றது ,தோழர்கள் C.செல்வின் சத்யராஜ் BSNLEU,சந்திரசேகர் SNEA,A.அருணாசலம் AIBSNLEA, கண்டன உரை நிகழ்த்தினார்கள் .தோழர் முத்துக்குமார் FNTO,தோழர் ராதாக்ருஷ்ணன் TEPU,தோழர்  அழகுமலை சேவா BSNL ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .




அகர்தலா மத்திய செயற்குழு முடிவுகள்




நமது சங்கத்தின் மத்திய செயற்குழு 03.04.2018 முதல் 05.04.2018 வரை அகர்தலாவில் சிறப்பாக நடைபெற்றது. ஊழியர் நலன் சார்ந்த கோரிக்கைகள் மீது ஆழமான விவாதங்கள் நடைபெற்றது. 

ஊழியர் கோரிக்கைகளில் BSNL நிர்வாகத்தின் இன்றைய மெத்தன போக்கு, தேங்கியுள்ள ஊழியர் தரப்பு கோரிக்கைகள், BSNLல் செய்யப்படும் தேவையற்ற  செலவினங்கள், ஊழியர் பற்றாக்குறை, Outsourcing, பொதுவான பிரச்சனைகள் என பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு போராட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, 03.05.2018 அன்று கோரிக்கை தினம் அனுஷ்டிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அன்று நாடு முழுவதும் கருப்பு பேட்ஜ்  அணிந்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் கொடுக்கப்பட்டுள்ளது.  

"கோரிக்கை தின" கோரிக்கைகள்:

01. BSNL பணிகளை அவசர கதியில் Outsourcing முறையில், தனியாருக்கு தாரைவார்க்காதே!

02. தேவையற்ற செலவினங்களை கட்டுப்படுத்து!

03. மருத்துவ சலுகைகளை பறிக்காதே!

04. ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யாதே!

05. Sr.TOA கேடரில் புதிய பணி நியமனம் செய்!

மத்திய செயற்குழு முடிவுகளை கறாராக அமுல்படுத்துவோம்....

ஊழியர் நல கோரிக்கைகளை வென்றெடுப்போம்!

தோழமையுடன்,
C.செல்வின் சத்யராஜ் 
மாவட்டசெயலர் 

Thursday, 8 March 2018

மார்ச் 8 மகளிர் தினம்



BSNLEU மதுரை மாவட்ட சங்கம் மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது 


தோழமையுள்ள 
C.செலவின் சத்யராஜ் 
மாவட்டசெயலர்