DEAR COMRADE Today we meet in our union office for Dist Office Meeting by 5pm.
Com come in time with out fail.we have to plan our future tasksbsnleu

welcome

Thursday, 21 September 2017
Wednesday, 20 September 2017
Tuesday, 19 September 2017
Revolutionary Greetings on 19th September Strike Anniversary!
On this 49th Anniversary of the Historic One Day Strike of 19th September 1968 by the CG employees and workers, my Warm Greetings to all of our senior comrades who participated in the strike and also to all comrades, friends and well wishers of the CG and BSNL employees!.
This is a day to remember our glorious past and to pledge ourselves to the great tasks that are before us.
On this day, we remember and pay homage to the great martyrs who sacrificed their valuable lives in the cause of the working class!
Agreement reached between BSNLEU and the Management, on the issue of outsourcing Customer Service Centre activities.
Based on the strong opposition conveyed to the BSNL Management, by BSNLEU, in the matter of outsourcing the activities of Customer Service Centres, a discussion took place today between the Management and BSNLEU. Com. P. Abhimanyu, GS and com. Swapan Chakraborty, Dy.GS, represented BSNLEU. Shri N.K. Mehta, Director (EB), who is holding additional charge as Director (CFA) and shri Anil Jain, CGM NC NGN, represented the Management. BSNLEU expressed it’s protest for taking such a serious decision, without consulting the Recognised Union. They also expressed their concern that, the proposed outsourcing of CSC activities would render a large number of employees surplus. Further, they strongly demanded that the Management should give up the proposal of outsourcing and should make fresh recruitment of staff to face the shortage. From the Management Side, it was replied that there was urgent need to upgrade the ambience of the Customer Service Centres, at par with that of the private telecom companies. They also justified the outsourcing by stating that the employees are retiring at a very fast phase and told that sufficient staff was not available in many places to man the Customer Service Centres. After prolonged discussion, the following understanding is reached.
(1) Management will keep under abeyance it’s decision to outsource Customer Service Centre activities throughout the country.
(2) To experiment it’s decision of outsourcing, the Management will outsource three customer service centres in each of the four zones.
(3) Meanwhile Management will collect the data about the total number of employees working in all the customer service centres throughout the country and their age profile.
Further talks will take place between the Union and the Management, based on the data collected as mentioned in para (3) above.
Thursday, 10 August 2017
பழனியில் 9-8-17 எழுச்சி மிகு கண்டன ஆர்ப்பாட்டம்...
அருமைத் தோழர்களே ! பழனியில் நமது
BSNLEU சார்பில் கடந்த
04/08/2017 அன்று நடைபெற்ற அவசரபொதுக்குழுவில் எடுக்கப்பட்ட போராட்டத்திட்டம். தோழர் பழனிக்குமார் மாநில அமைப்பு செயலர் மற்றும் தோழர் அன்பழகன் கிளைச்செயலர் ஆகியோருக்கு கொலைமிரட்டல் விடுத்த சமூகவிரோதிகள் மீது இலாகாபூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தலமட்ட அதிகாரிகளின் பாரபட்சப்போக்கை கண்டித்தும் வகுக்கப்பட்ட போராட்டத்திட்டப்படி 09/08/2017 அன்று மாலை
5.30 மணியளவில் தொலைபேசி நிலையம் முன்பாக பழனி வட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆதரவோடு மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் நடந்தது. மாநிலசங்க , மாவட்டச்சங்க நிர்வாகிகளும், மற்றும் பல கிளைசெயலர்களும், பழனிவட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு தோழர்களும், மற்றும்
BSNLEU முன்னணி ஊழியர்களும், ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தோழர்களும் திரளாக கலந்து கொண்டார்கள்....
நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, பழனி கிளைத் தலைவர் தோழர். சாது சிலுவைமணி தலைமை தாங்கினார். கிளை செயலர் தோழர். அன்பழகன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில அமைப்புச் செயலர் தோழர். பழனிக்குமார் எழுச்சி மிகு கோஷம் எழுப்பியதோடு போராட்டத்தின் அவசியம் குறித்து விளக்கினார். அதன் பின், CITU, BEFI, AIIEA, மற்றும் பழனி நகர தொழிற் சங்கத்தின் பொறுப்பாளர்களும் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
அதற்கடுத்து BSNLEU சார்பாக மாவட்டத்தலைவர் பிச்சைக்கண்ணு, முன்னாள் மாவட்டச் செயலர் தோழர். எஸ். சூரியன், மாவட்டச் செயலர் சி. செல்வின் சத்தியராஜ் ஆகியோரும் கண்டன உரை நிகழ்த்தினார்கள். கிளைப்பொருளர் தோழர். செந்தில்கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார். BSNL நிர்வாகம் அத்து மீறியவர்கள் மீது மேலும் தாமதிக்காமல், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ... எதிர் வரும் 23-08-17 அன்று அடுத்த கட்ட போராட்டம் மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெறும்.
நவம்பர் 9 - 11 தேதிகளில் தில்லியில் மாபெரும் தர்ணா மத்திய தொழிற்சங்கங்களின் தேசிய சிறப்பு மாநாடு அறைகூவல்...
வரும் நவம்பர் 9 – 11 தேதிகளில் தலைநகர் புதுதில்லியில் கோரிக்கைகளை வலி யுறுத்தி மாபெரும் மூன்று நாட்கள் தர்ணா போராட்டத்தை நடத்திடவும், தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நோக்கி முன்னேறவும் செவ்வாய்க்கிழமையன்று புதுதில்லியில் நடைபெற்ற மத்திய தொழிற்சங்கங்களின் தேசிய சிறப்பு மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக, அனைத்து மத்திய சங்கங்களும், தேசிய சம்மேளனங்களும், மத்தியஅரசு ஊழியர் மகா சம்மேளனம், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம், பிஎஸ்என்எல் ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்கள்,வங்கி ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்கள், இன்சூரன்ஸ் ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்கள், பாதுகாப்புத்துறை ஊழியர் சங்கம், அங்கன்வாடி ஊழியர்கள், ‘ஆஷா’ ஊழியர்கள் என அனைத்துத்தரப்பு தொழிலாளர்களும், ஊழியர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட மாபெரும் சிறப்பு மாநாடு, செவ்வாய்க்கிழமையன்று புதுதில்லியில் உள்ள தல்கொட்ரா அரங்கத்தில் நடைபெற்றது.இச்சிறப்பு மாநாட்டினை டாக்டர் ஹேமலதா(சிஐடியு), ராமேந்திர குமார் (ஏஐடியுசி). அசோக்சிங் (ஐஎன்டியுசி), சுப்புராமன் (தொமுச)முதலானவர்களைத் தலைமைக்குழுவாகக் கொண்டு காலை 11 மணியளவில் தல்கொட்ராஅரங்கில் தொடங்கியது. சிஐடியு சார்பில் தபன்சென், ஏஐடியுசி சார்பில் அமர்ஜித் கவுர், ஐஎன்டியுசி சார்பில் டாக்டர் சஞ்சீவ ரெட்டி, தொமுச சார்பில் சண்முகம் முதலானோர் மாநாட்டின் பிரகடனத்தை விளக்கி உரையாற்றினார்கள்.
மாநாட்டுப் பிரகடனம்
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரகடனம்வருமாறு: “நாட்டில் மிகவும் தொன்மைவாய்ந்த தொழிற்சங்கமான ஐஎன்டியுசி சங்கம், அரசின்முத்தரப்பு மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தை களில் பங்கேற்க முடியாது என்கிற முறையில் மத்திய பாஜக அரசு எதேச்சதிகாரமான முறையில் முடிவெடுத்திருப்பதை இச்சிறப்பு மாநாடு கடுமையான வார்த்தைகளில் ஒருமனதாகக் கண்டிக்கிறது.மத்திய அரசு தன்னுடைய தொழிலாளர் விரோத, ஊழியர் விரோத பாதையில் தொடர்ந்துசென்று கொண்டிருக்கிறது. 2015 செப்டம்பர் 2 மற்றும் 2016 செப்டம்பர் 2 வேலை நிறுத்தங்ங்களில் நாட்டில் பணிபுரியும் கோடிக்கணக்கான தொழிலாளர்களும், ஊழியர்களும் பங்கேற்ற போதிலும், ஆட்சியாளர்கள் உழைக்கும் மக்கள்மீதான தாக்குதல்களைக் குறைத்திடவே இல்லை. மாறாக மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் அடக்குமுறை மற்றும் ஊழியர் விரோதக் கொள்கை களின் காரணமாக அமைப்புரீதியாக பணி யாற்றும் தொழிலாளர்கள் மட்டுமல்ல, முறை சாராத் தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
எரிகிற தீயில்...
வேலைவாய்ப்பின்மை என்பது மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. பல தொழிற்பிரிவுகளில் வேலை இழப்புகள்ஏற்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்பத் துறையில் கூட மிகப்பெரிய அளவில் வேலை இழப்புகள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.பொதுப் போக்குவரத்து, மின்சாரம்,மருந்துகளின் விலைகள் அதிகரித்திருப்ப துடன் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்திருப்பதன் காரணமாக சாமானிய மக்களின் வாழ்நிலைமை மிகவும்மோசம் அடைந்திருக்கிறது.
இந்தப்பின்னணி யில் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போலாகி இருக்கிறது. சமூகப் பாதுகாப்பு மற்றும் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்கான அரசின் ஒதுக்கீடுகள் கடுமையாக வெட்டிச் சுருக்கப்பட்டிருப்பதால், முறைசாராத் தொழில்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களின் நிலைமைகள் மிகவும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.இந்தியத் தொழிலாளர் மாநாடுகளும், உச்சநீதிமன்றமும் நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே ஒப்பந்த ஊழியர்களுக்கும், சம வேலைக்கு சம ஊதியம்அளித்திட வேண்டும் என்று ஆணை பிறப்பித் துள்ள போதிலும் அதனை செவிமடுக்க மோடிஅரசு மறுத்து வருகிறது.
தாரைவார்த்திட துடிப்பு...
இவைமட்டுமல்லாமல் நாட்டின் பொரு ளாதாரத்திற்கு ஆணிவேராகத் திகழும் பொதுத்துறை நிறுவனங்களான ரயில்வே, ஏர் இந்தியா,வங்கிகள், பாதுகாப்புத்துறை, பொதுப் போக்குவரத்து, எண்ணெய், மின்சாரம் போன்ற அனைத்துத்துறைகளையும் தனியாரிடம் விற்பதற்கு மோடி அரசாங்கம் துடித்துக் கொண்டிருக்கிறது. உண்மையில் இவை அனைத்துக்கும் உடமையாளர்கள் இந்த நாட்டுமக்கள். இவர்களின் உடமையை மோடி அரசாங்கம் அடிமாட்டு விலைக்கு தங்களுக்கு வேண்டிய தனிநபர்களிடம் தாரை வார்த்திடத் துடித்துக் கொண்டிருக்கிறது.இவற்றுக்கு எதிராக இத்துறைகளில் வேலைபார்த்திடும் தொழிலாளர்களும், ஊழியர்களும் போராட்டப்பாதையில் இறங்கி யுள்ளனர். ஜூலை மாதம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். ஆகஸ்டில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளார்கள். பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் கடந்த ஒருமாத காலமாக தில்லி நாடாளுமன்ற வீதியில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
மத்தியஅரசு ஊழியர்களும், மாநில அரசு ஊழியர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்குத் தயாராகி வருகிறார்கள்.இத்தகைய சூழ்நிலையில் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடையின் பணி என்பது தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்திடவும், நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்தத்திற்கு அனைத்துத்தரப்பு தொழி லாளர்களையும், ஊழியர்களையும் அணி திரட்டுவதிலும் கவனம் செலுத்துவதாகும். அதனையொட்டி, இச்சிறப்பு மாநாடு கீழ்க்கண்டஇயக்கங்களை மேற்கொண்டிட திட்டமிட்டுள்ளது:
(1) அனைத்துத்துறைகளிலும் ஒன்றுபட்ட போராட்டங்களை ஒருமுகப்படுத்தி, முன்னெடுத்துச் செல்வது.
(2) தொழிலாளர்களையும், ஊழியர்களை யும் ஒன்றிய, மாவட்ட, மாநில அளவிலும், தொழிற்பிரிவு மையங்களிலும் அணிதிரட்டுவது.
(3) தலைநகர் தில்லியில் வரும் நவம்பர் 9, 10,11 ஆகிய தேதிகளில் பெரும்திரள் தர்ணா போராட்டத்தை மேற்கொள்வது, இதில் நாடு முழுவதுமிருந்து பல லட்சக்கணக்கான ஊழியர்களைத் திரட்டுவது.
(4) மோடி அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, ஊழியர் விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்குத் தயாராகுமாறு அறைகூவல் விடுப்பது.மேற்கண்ட திட்டங்கள் அனைத்தையும் முழுமையாக வெற்றிபெற வைத்திட அனைத்துத் தொழிலாளர்களும், ஊழியர்களும் முன்வரவேண்டும் என்று இச்சிறப்பு மாநாடு அனைவரையும் சங்க வித்தியாசமின்றி கேட்டுக்கொள்கிறது.
12 அம்சக் கோரிக்கைகள்
1. பொது விநியோக முறையை அனை வருக்குமானதாக மாற்றுவதன் மூலம் விலை வாசியைக் கட்டுப்படுத்திட உடனடியாக நடவடிக்கை எடுத்திடு.
2. வேலைவாய்ப்பைப் பெருக்கி, வேலை யில்லாத் திண்டாட்டத்தை ஒழித்திடு.
3. தொழிலாளர் நலச் சட்டங்களைக் கறாராகஅமல்படுத்து. தொழிலாளர் சட்டங்களை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடு.
4. அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்.
5. குறைந்தபட்ச ஊதியம் 18 ஆயிரம் ரூபாய்நிர்ணயித்து, அதனுடன் உயரும் விலைவாசிப் புள்ளிக்கு ஏற்ப ஊதியத்தையும் அதிகரித்திடு.
6. அனைத்து உழைப்பாளி மக்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 3 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்.
7. மத்திய, மாநில பொதுத்துறை நிறுவ னங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்காதே.
8. நிரந்தரப் பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்காமல் நிரந்தர ஊழியர்களையே அமர்த்திடு. தற்போ துள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர ஊழியர்களின் ஊதியத்தையே வழங்கிடு.
9. போனஸ், வருங்கால வைப்புநிதி முதலானவற்றின் உச்சவரம்பை நீக்கிடு, பணிக்கொடைக் கான தொகையையும் அதிகப்படுத்திடு.
10. விண்ணப்பித்த 45 நாட்களுக்குள் தொழிற்சங்கங்களை பதிவு செய்திடு. சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் சி.87, சி,98 ஆகியவற்றை ஏற்றுக்கொள்.
11. தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றுவதை நிறுத்து.
12. ரயில்வே, இன்சூரன்ஸ், பாதுகாப்புத் துறையின் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்காதே.இச்சிறப்பு மாநாட்டில் தமிழகத்திலிருந்து சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன், வங்கி அலுவலர் சங்க தலைவர் தாமஸ் பிராங்கோ, வங்கி ஊழியர் சங்கத் தலை வர்கள் சி.பி.கிருஷ்ணன், கே.கிருஷ்ணன், ஏஐபிஇஏ சார்பில் வெங்கடாசலம், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தைச் சேர்ந்த எம்.எஸ்.ராஜா, அகில இந்திய மாநில அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஸ்ரீகுமார், பாதுகாப்புத்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஸ்ரீகுமார், நமது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் பி..அபிமன்யு முதலானோர் கலந்து கொண்டார்கள்.
Subscribe to:
Posts (Atom)